Posts

Showing posts from May 18, 2011

அன்பின் நிலை

Image
குற்றமிழைத்த அன்பின் மிகுதியை  எதனினும் கொண்டும் ஏற்புடையாகாது  பரிதவிக்கும் மவுனத்தின் இடப்பெயர்ச்சி  மன வலி கொண்டு வளர்த்தெடுக்கிறது  அதனதன் தனிமை . இதுவரையில் என்னிடம் உருவாகியிராத  புன்னைகையும் கண்ணீரையும்  நேசங்களில் வளப்படுத்திய முக்காலமும்  தூற்றி கொண்டிருக்கிறது என் செயலை  அதன் நம்பிக்கையில் தோற்றி கொண்டிருக்கிறது  என் கொடூர புன்னகையும் கண்ணீரும் . புற நோக்குதல் யார்க்கும் அறிந்தவையே  அதன் சந்தேகத்தின் பரவல் மிகைப்படுத்த  செயலும் பொய்யும் நுட்ப  பெரு வெளியில்  நொடிகளின் இயக்கத்தில் மிதந்து  கொண்டிருக்கிறது . இப்பொழுதைய நீள்கின்ற நெஞ்சத்தின்  மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது  மன விடை பெறுகின்ற அனைத்திலும்  முதல் நேசிப்பின் விதை உன்னிடமே  விருட்சமாகும் . உந்தன் நிலையை போல எந்நிலையும் அமைந்திருக்க சற்று கூடுதலான பரிதவிப்பில்  நம் நிறைவேறாத கனவினை விடிய செய்கிறது  புதிய பிரபஞ்சம் . அன்பின் நிலை எந்நிலையையும் தாங்கி  கொள்ள கூடியதாக அமைந்து விடுகிறது .                                                          தி .ராஜேஷ்