Posts

Showing posts from November 4, 2011

கட்டமைக்கப்படுகிறது .

இன்றோ நாளையோ  பிதற்றப்படும் வாழ்வு  இருப்பு  கொள்வதற்காக  கற்பனையாகும்  கனவுகள்  முகமற்று உலவுகிறது . முறையற்ற ஏளனம்  என்னை வடிவமைத்து  கொண்டிருக்கிறது  குறித்து கொள்ளும்  தோல்வியினை  விட்டு விட்டிருக்கிறது  மனம் . ஒப்பில்லா தனிமை  விடுப்படும்  இரவாக  கட்டமைக்கப்படுகிறது  முடிவிலி காலம்  என்னுடையதாக  மாற்றப்படும் வரை  பொருள் கொள்வதற்கு  வடிவமைக்கவில்லை  முகமற்ற என் கனவுகள் .                         -வளத்தூர் தி.ராஜேஷ்