கட்டமைக்கப்படுகிறது .
இன்றோ நாளையோ பிதற்றப்படும் வாழ்வு இருப்பு கொள்வதற்காக கற்பனையாகும் கனவுகள் முகமற்று உலவுகிறது . முறையற்ற ஏளனம் என்னை வடிவமைத்து கொண்டிருக்கிறது குறித்து கொள்ளும் தோல்வியினை விட்டு விட்டிருக்கிறது மனம் . ஒப்பில்லா தனிமை விடுப்படும் இரவாக கட்டமைக்கப்படுகிறது முடிவிலி காலம் என்னுடையதாக மாற்றப்படும் வரை பொருள் கொள்வதற்கு வடிவமைக்கவில்லை முகமற்ற என் கனவுகள் . -வளத்தூர் தி.ராஜேஷ்