கட்டமைக்கப்படுகிறது .



இன்றோ நாளையோ 
பிதற்றப்படும் வாழ்வு 
இருப்பு  கொள்வதற்காக 
கற்பனையாகும்  கனவுகள் 
முகமற்று உலவுகிறது .

முறையற்ற ஏளனம் 
என்னை வடிவமைத்து 
கொண்டிருக்கிறது 
குறித்து கொள்ளும் 
தோல்வியினை 
விட்டு விட்டிருக்கிறது 
மனம் .

ஒப்பில்லா தனிமை 
விடுப்படும் 
இரவாக 
கட்டமைக்கப்படுகிறது 

முடிவிலி காலம் 
என்னுடையதாக 
மாற்றப்படும் வரை 
பொருள் கொள்வதற்கு 
வடிவமைக்கவில்லை 
முகமற்ற என் கனவுகள் .
                        -வளத்தூர் தி.ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு