கட்டமைக்கப்படுகிறது .
இன்றோ நாளையோ
பிதற்றப்படும் வாழ்வு
இருப்பு கொள்வதற்காக
கற்பனையாகும் கனவுகள்
முகமற்று உலவுகிறது .
முறையற்ற ஏளனம்
என்னை வடிவமைத்து
கொண்டிருக்கிறது
குறித்து கொள்ளும்
தோல்வியினை
விட்டு விட்டிருக்கிறது
மனம் .
ஒப்பில்லா தனிமை
விடுப்படும்
இரவாக
கட்டமைக்கப்படுகிறது
முடிவிலி காலம்
என்னுடையதாக
மாற்றப்படும் வரை
பொருள் கொள்வதற்கு
வடிவமைக்கவில்லை
முகமற்ற என் கனவுகள் .
-வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment