Posts

Showing posts from October 3, 2011

முற்றும்.

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை  http://puthu.thinnai.com/?p=4638 முன் பெற்ற காலமொன்றில்  தன் நிலையினை  அளவிடுவதற்கு  தூற்றும் நினைவினை கொண்டு  எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு  பார்வையை கூச  செய்த தன்மை  இனி  வருவதற்கில்லை  இயங்காமல் போன  காலமொன்றில்  சேகரித்து வைக்கிறேன்  முதலின் அனைத்தும் . இங்கு தான்  முதன் முதலாக  நியாயப்படுத்தி கொள்கிறது  பல நிலைகளுடைய  தன் சுய விருப்பங்கள் . நீள்கின்ற அவைகளை  சுய தொன்மை சுருக்கி விட்டது  பல மாலை பொழுதின்  கண்ணீரோடு . இன்றளவும்  நினைவின் வடுவும்  உறுதி செய்கிறது  அவையை. யாரும் பார்த்திராத  துரோக மவுனத்தின்  அணைப்பில்  புகலிடம் எய்தினேன் . இங்கு தான்  முதல்  அகமகிழ்வையும் ,அகதுயரத்தையும்  கடந்தேன் . மறுப்பதற்கு மறத்தல் ஒன்றே  இன்னும்  மன்னித்து கொண்டிருக்கிறது  முன் பெற்ற காலமொன்று . விலகிய மவுனம்  இன்னும்  கலைந்து விடவில்லை  அதை அப்படியே  உயிர்ப்புடன்   வைத்திருக்கிறேன்  நினைவுகளின் தொகுப்பில் . கடந்து விட்ட அன

முன் இரவின் பொழிவு.

முன் இரவின் பொழிவுகளில்  நீண்டிருக்கும் இரவுதனை  எண்ண போர்வைக்குள்  சுமத்தப்பட்டிருக்கிறது . சுய சுமையின் கணம்  நொடிகளின் மீதே  பயணப்படுகிறது . காலத்தின் காத்திருப்பை  நம் நினைவலைகள்  பொருட்படுத்துவதில்லை . அதன் வழிகளில்  தன் கூற்றின் பகை  வழிந்தோடும் உறவுகளில்  வளர்கிறது . நெடுந்தொலைவின்  வன்மம் படர  துணையினை  தேடுகிறது . தன் அமைவின்  இழிநிலை  குற்றம் சுமத்த  செயல்கள்  இன்னும் கூடுகிறது . உணர்த்தி விட்ட  தொன்மையில்  அன்று சிந்திய  பல சுய நீர்மங்கள்  திரவத்தின் தலைவன் ஆனது . இன்று தலைவியை  நீர்மம் சூழ  மன தொலைவுகள்  நெருங்குகிறது .                         -வளத்தூர் தி.ராஜேஷ்