முன் இரவின் பொழிவு.
முன் இரவின் பொழிவுகளில்
நீண்டிருக்கும் இரவுதனை
எண்ண போர்வைக்குள்
சுமத்தப்பட்டிருக்கிறது .
சுய சுமையின் கணம்
நொடிகளின் மீதே
பயணப்படுகிறது .
காலத்தின் காத்திருப்பை
நம் நினைவலைகள்
பொருட்படுத்துவதில்லை .
அதன் வழிகளில்
தன் கூற்றின் பகை
வழிந்தோடும் உறவுகளில்
வளர்கிறது .
நெடுந்தொலைவின்
வன்மம் படர
துணையினை
தேடுகிறது .
தன் அமைவின்
இழிநிலை
குற்றம் சுமத்த
செயல்கள்
இன்னும் கூடுகிறது .
உணர்த்தி விட்ட
தொன்மையில்
அன்று சிந்திய
பல சுய நீர்மங்கள்
திரவத்தின் தலைவன் ஆனது .
இன்று தலைவியை
நீர்மம் சூழ
மன தொலைவுகள்
நெருங்குகிறது .
-வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment