Posts

Showing posts from August 16, 2011

காலம்-திண்ணை

 இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது இருபதாவது  கவிதை :) http://puthu.thinnai.com/?p=3287 மதிப்பிழந்த என்  சுயத்தை  வெறுமென  வேடிக்கை காட்டும்  பொருளாக  மாற்றியமைக்க  இயன்ற வரை  முயல்கிறது  என்னை அறியப்படாத  காலம் ஒன்று . தன்னை நிருபணம் செய்வதற்கு  சுயத்தை  ஒன்றுமில்லாமல்  செய்வதை  வேடிக்கை  பார்க்கிறது  என்னை  அறிந்து வைத்துள்ள  காலம் ஒன்று . சுய அங்கீகாரம்  அச்சில்  பெறுவதில் இல்லை  என்பதை  உணர செய்கின்ற  காலம் இன்னும்  தோன்றியிருக்கவில்லை . காலங்கள்  இணைத்துள்ள  என்னை  பெருவெளி  மட்டுமே  அறியக்கூடிய  சுயத்தை  பெற்றிருக்கிறேன் .                          வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .