Posts

Showing posts from December 10, 2012

பிரபஞ்ச ஒப்புமையின் மைக்ரோ வினாடி.

இந்த வார உயிரோசையில் வெளியான கவிதை  எத்தனை முறை பிழைகளோடு எழுதினாலும் அதனை திருத்தி வெளியிடும் ஆசிரியருக்கு அன்பின் நன்றி .  http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6135 இன்னமும் உருவாகியிராத மவுனத்தில்  எதிரொலித்துக் கொண்டிருக்கிறது   மன அமைவு . அவையாவும் . சிதறும் தன் பிம்பத்தை   ஒளித்து வைக்க இடம்   இல்லாமையால்   தன் அக மவுனத்தின் வழியே உருமாற்றம் அடைய   அதன் வினையின் நிகழ் . தன் பிம்பம் இங்கே வீழ்ந்து கிடைக்கையில்   மறு நிலையின் விடியல்   மற்றொரு பிரபஞ்சத்தில் தொடர்கிறது . என் நிழலுக்கு உண்டான மவுனத்தின் கணம்   என் ஒளியாகி   பிரபஞ்ச நகர்வில் நகர்கிறது . பிரபஞ்ச ஒப்புமையில்    என் நதி அழைத்துச் செல்லும்    இன்னும் பிற காலமிது .   முற்றும் என் வினையொன்றில்   தன் நதி தொன்மையின் படிமத்தைக்   கற்பனையாக்குகிறது.                               -வளத்தூர் தி .ராஜேஷ்  அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .