பிரபஞ்ச ஒப்புமையின் மைக்ரோ வினாடி.

இந்த வார உயிரோசையில் வெளியான கவிதை 

எத்தனை முறை பிழைகளோடு எழுதினாலும் அதனை திருத்தி வெளியிடும் ஆசிரியருக்கு அன்பின் நன்றி . 

http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6135

இன்னமும் உருவாகியிராத மவுனத்தில் 
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது  
மன அமைவு .

அவையாவும் .

சிதறும் தன் பிம்பத்தை  
ஒளித்து வைக்க இடம்  
இல்லாமையால்  
தன் அக மவுனத்தின் வழியே
உருமாற்றம் அடைய  
அதன் வினையின் நிகழ்.

தன் பிம்பம் இங்கே வீழ்ந்து கிடைக்கையில்  
மறு நிலையின் விடியல்  
மற்றொரு பிரபஞ்சத்தில் தொடர்கிறது .

என் நிழலுக்கு உண்டான மவுனத்தின் கணம்
 என் ஒளியாகி 
பிரபஞ்ச நகர்வில் நகர்கிறது .

பிரபஞ்ச ஒப்புமையில் 
 என் நதி அழைத்துச் செல்லும் 
 இன்னும் பிற காலமிது .
 
முற்றும் என் வினையொன்றில்  
தன் நதி தொன்மையின் படிமத்தைக்  
கற்பனையாக்குகிறது.

                              -வளத்தூர் தி .ராஜேஷ் 

அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு