Posts

Showing posts from October 19, 2011

நிழல். -உயிரோசை.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை  http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4892 நஞ்சு உட்கொண்டிருந்த  நிழலொன்று  இந்த பகல் பொழுதை  உற்று நோக்குகிறது . அவை தன் இரவின்  மீதங்களை  செயலிழக்க செய்வதில் முனைப்பாகிறது . நிழல் அசைவுகள்  இப்பொழுது  உயிர்  கொண்டிருக்கிறது . நெருங்கும் இறுதி  அந்நிழலே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது . எளிதாக கடந்து விடும்  எப்பொழுதுமான  நிழல்  இவையில்லை  பிறப்பிக்கப்பட்ட வன்மம்  நிறைந்திருக்கிறது . நஞ்சின் நிழல்  தன் உருவம்  கொண்டு  தீண்டியது  மெல்ல படரும்  நஞ்சு  உருகி கொண்டிருக்கிறது . பகல்  இரவினையும்  உருவாக்கி விட்டது . கைவிடப்பட்ட நிழல்  சுய ஒளியினை நம்பி இருப்பதில்லை .                                   வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு