நிழல். -உயிரோசை.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை 


http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4892




நஞ்சு உட்கொண்டிருந்த 
நிழலொன்று 
இந்த பகல் பொழுதை 
உற்று நோக்குகிறது .
அவை தன் இரவின் 
மீதங்களை 
செயலிழக்க செய்வதில்
முனைப்பாகிறது .

நிழல் அசைவுகள் 
இப்பொழுது 
உயிர் 
கொண்டிருக்கிறது .

நெருங்கும் இறுதி 
அந்நிழலே
தீர்மானிக்க வேண்டியிருக்கிறது .

எளிதாக கடந்து விடும் 
எப்பொழுதுமான 
நிழல் 
இவையில்லை 
பிறப்பிக்கப்பட்ட வன்மம் 
நிறைந்திருக்கிறது .

நஞ்சின் நிழல் 
தன் உருவம் 
கொண்டு 
தீண்டியது 
மெல்ல படரும் 
நஞ்சு 
உருகி கொண்டிருக்கிறது .
பகல் 
இரவினையும் 
உருவாக்கி விட்டது .

கைவிடப்பட்ட நிழல் 
சுய ஒளியினை
நம்பி இருப்பதில்லை .

                                  வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு