நிழல். -உயிரோசை.
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4892
நஞ்சு உட்கொண்டிருந்த
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4892
நஞ்சு உட்கொண்டிருந்த
நிழலொன்று
இந்த பகல் பொழுதை
உற்று நோக்குகிறது .
அவை தன் இரவின்
மீதங்களை
செயலிழக்க செய்வதில்
முனைப்பாகிறது .
நிழல் அசைவுகள்
இப்பொழுது
உயிர்
கொண்டிருக்கிறது .
நெருங்கும் இறுதி
அந்நிழலே
தீர்மானிக்க வேண்டியிருக்கிறது .
எளிதாக கடந்து விடும்
எப்பொழுதுமான
நிழல்
இவையில்லை
பிறப்பிக்கப்பட்ட வன்மம்
நிறைந்திருக்கிறது .
நஞ்சின் நிழல்
தன் உருவம்
கொண்டு
தீண்டியது
மெல்ல படரும்
நஞ்சு
உருகி கொண்டிருக்கிறது .
பகல்
இரவினையும்
உருவாக்கி விட்டது .
கைவிடப்பட்ட நிழல்
சுய ஒளியினை
நம்பி இருப்பதில்லை .
வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு
Comments
Post a Comment