ஆதி.
ஒன்றில் இருந்து ஒன்றாக பயிற்றுவிக்கப்பட்ட தனிமை இன்று முதல் விடுவிக்கப்படுவதாக கருதப்படுகிறது . நெருங்குதல் நம் தொலைவினை சாத்தியமற்றதாக்கியது . விழித்திருக்கும் நினைவை மட்டும் ஓயாமல் இயக்கி கொண்டிருக்கும் மகா இயக்கமாக்கி கொண்டிருக்கிறது நம் பிரபஞ்சம் . என் நீர்மம் வழிந்தோடி உறைந்த நினைவுகளில் கரைகிறது நிகழ்வுகள் . உன் நீர்மம் நிகழ்வின் உறுதியில் அன்பின் நிறைவில் மெய்பிக்கப்படுகிறது . நம் நீர்மம் திணிக்கப்பட்ட பிரபஞ்ச குறியீடு அல்ல . அனைத்துக்குமான ஆதி. -வளத்தூர் தி. ராஜேஷ் .