Posts

Showing posts from November 7, 2011

ஆதி.

ஒன்றில் இருந்து ஒன்றாக  பயிற்றுவிக்கப்பட்ட தனிமை  இன்று முதல்  விடுவிக்கப்படுவதாக  கருதப்படுகிறது .  நெருங்குதல்   நம் தொலைவினை  சாத்தியமற்றதாக்கியது . விழித்திருக்கும்  நினைவை மட்டும்  ஓயாமல்  இயக்கி கொண்டிருக்கும்  மகா இயக்கமாக்கி  கொண்டிருக்கிறது  நம் பிரபஞ்சம் . என் நீர்மம்  வழிந்தோடி  உறைந்த நினைவுகளில்  கரைகிறது நிகழ்வுகள் . உன் நீர்மம்  நிகழ்வின் உறுதியில்  அன்பின் நிறைவில்  மெய்பிக்கப்படுகிறது . நம் நீர்மம் திணிக்கப்பட்ட  பிரபஞ்ச குறியீடு அல்ல . அனைத்துக்குமான  ஆதி.              -வளத்தூர் தி. ராஜேஷ் .

உறக்கமற்ற இரவு-திண்ணை

இந்த வாரம்   திண்ணையில்  வெளியான இருபத்தி ஒன்பதாம் கவிதை . http://puthu.thinnai.com/?p=5702 நம் சந்திப்புகளின்  கோர்வையை  எளிதாக சொல்லிவிட  முடிகிறது  இந்த காலத்திருக்கு . உன் புன்னகையின்  உலா  வீற்றிருப்பதை  இந்த மாலையும்  மயங்கி கிடக்கிறது . நம் இரவினையும்  விட்டு வைக்கவில்லை  நினைவுகள்  மவுன மன ஒலிகளை  கடத்துகிறது  உன்னிடமாகவும்  என்னிடமாகவும்  இரவு  ஓய்ந்து  விட்டிருக்கிறது . உன்னிடம்  சொல்வதற்காக  விட்டு வைத்திருக்கிறது விடியல்  அவை ஒவ்வொன்றாக  பட்டியலிட்டிருக்கிறது  உறக்கமற்ற இரவுவின்   நம் கனவின் மீதங்களை . இதற்காகவே அன்றும்  பிரபஞ்சம் இருந்திருகின்றது .                          -வளத்தூர் தி .ராஜேஷ் .                           அன்பின் நன்றி திண்ணை ,நண்பர்களுக்கு .