ஆதி.

ஒன்றில் இருந்து ஒன்றாக 
பயிற்றுவிக்கப்பட்ட
தனிமை 
இன்று முதல் 
விடுவிக்கப்படுவதாக 
கருதப்படுகிறது . 

நெருங்குதல்  
நம் தொலைவினை 
சாத்தியமற்றதாக்கியது .
விழித்திருக்கும் 
நினைவை மட்டும் 
ஓயாமல் 
இயக்கி கொண்டிருக்கும் 
மகா இயக்கமாக்கி 
கொண்டிருக்கிறது 
நம் பிரபஞ்சம் .

என் நீர்மம் 
வழிந்தோடி 
உறைந்த நினைவுகளில் 
கரைகிறது நிகழ்வுகள் .
உன் நீர்மம் 
நிகழ்வின் உறுதியில் 
அன்பின் நிறைவில் 
மெய்பிக்கப்படுகிறது .

நம் நீர்மம் திணிக்கப்பட்ட 
பிரபஞ்ச குறியீடு அல்ல .
அனைத்துக்குமான 
ஆதி.
             -வளத்தூர் தி. ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு