ஆதி.
ஒன்றில் இருந்து ஒன்றாக
பயிற்றுவிக்கப்பட்ட
தனிமை
இன்று முதல்
விடுவிக்கப்படுவதாக
கருதப்படுகிறது .
நெருங்குதல்
நம் தொலைவினை
சாத்தியமற்றதாக்கியது .
விழித்திருக்கும்
நினைவை மட்டும்
ஓயாமல்
இயக்கி கொண்டிருக்கும்
மகா இயக்கமாக்கி
கொண்டிருக்கிறது
நம் பிரபஞ்சம் .
என் நீர்மம்
வழிந்தோடி
உறைந்த நினைவுகளில்
கரைகிறது நிகழ்வுகள் .
உன் நீர்மம்
நிகழ்வின் உறுதியில்
அன்பின் நிறைவில்
மெய்பிக்கப்படுகிறது .
நம் நீர்மம் திணிக்கப்பட்ட
பிரபஞ்ச குறியீடு அல்ல .
அனைத்துக்குமான
ஆதி.
-வளத்தூர் தி. ராஜேஷ் .
Comments
Post a Comment