போதுமானது .
மரணித்து கொண்டிருக்கும் ஒரு மவுனத்தை காலத்தாலும் அனுமானம் செய்ய இயலாது . இப்படியாக தான் தொடங்கியது உனக்கான என் முதல் வார்த்தை . ஆனால் நீ நம்புவதாக பாசாங்கு செய்கிறாய் . உன் விழிகளின் நிழல் கொண்டே எல்லா இரவினையும் கடக்கிறேன் . கனவெங்கும் நமக்கான மழை காத்திருக்கிறது அதன் நீர்ம சிதறல்கள் நம் மனதை ஒத்திருக்கிறது . இதை நீ மறுக்கவே இல்லையென்றாலும் உன் அக அசைவில் அறிந்து கொண்டேன் எனக்கான உன் ரகசியங்களை. பகலும் இவ்வாறாகவே தொடர்கிறது . இறுதியில் அனைத்துமே கனவென்றே நம்பவைக்கப்படுகிறது நமக்கான எதிர்காலம் . இதை நாம் கரம் பிடித்த பின் பரிசோதிக்கலாம் என்றாய் அழியாத புன்னகையை கொண்டு எனக்கு அது மட்டுமே போதுமானது . -வளத்தூர் தி.ராஜேஷ் .