போதுமானது .
மரணித்து கொண்டிருக்கும்
ஒரு மவுனத்தை
காலத்தாலும்
அனுமானம் செய்ய இயலாது .
இப்படியாக தான்
தொடங்கியது உனக்கான
என் முதல் வார்த்தை .
ஆனால்
நீ நம்புவதாக பாசாங்கு
செய்கிறாய் .
உன் விழிகளின்
நிழல் கொண்டே
எல்லா இரவினையும்
கடக்கிறேன் .
கனவெங்கும் நமக்கான
மழை காத்திருக்கிறது
அதன் நீர்ம சிதறல்கள் நம் மனதை
ஒத்திருக்கிறது .
இதை நீ மறுக்கவே
இல்லையென்றாலும்
உன் அக அசைவில்
அறிந்து கொண்டேன்
எனக்கான
உன் ரகசியங்களை.
பகலும் இவ்வாறாகவே
தொடர்கிறது .
இறுதியில் அனைத்துமே
கனவென்றே
நம்பவைக்கப்படுகிறது
நமக்கான எதிர்காலம் .
இதை நாம் கரம் பிடித்த பின்
பரிசோதிக்கலாம் என்றாய்
அழியாத புன்னகையை கொண்டு
எனக்கு அது மட்டுமே
போதுமானது .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment