Posts

Showing posts from August 22, 2011

நாளை ?-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை  http://puthu.thinnai.com/?p=3439 காத்திருக்கும்  இறுதி கொண்ட  வாழ்வை மற்றவர்கள்  தீர்மானிக்க  என் பிறப்பின்  உறுதி  இருள் கொண்ட  ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள்  கட்டளை இடும்  முன்னரே  மறுத்துவிடுகிறது  சுய ஒளி. அதன்  நிறப்பிரிகை  கவன சிதறலாகிறது. கணமேற்றும் நாட்களை  என் பருவங்கள்  கூட  அறிந்திருக்கவில்லை . குற்றசாட்டின் உண்மை  குற்றங்களில்  ஒருபோதும்  இருந்ததில்லை  சட்டங்கள் இயற்றும்  மேதமையில்  இருக்கபோவதில்லை  மனிதம் மறக்க  செய்யும்  மனித நேயத்தில்  மலிந்து கிடக்கிறது . மக்களின் பெருங்கூட்டம் இரைச்சலின் மிகுதி  வருத்தம் கொள்ளும்  அன்பின் பரிதவிப்பு யாவும்    என்னை  சேர்வதற்கு முன்பாக  நாளை  ஒன்று  இருக்க வேண்டுமே ? உன்னை போல  பகை கொண்ட  வன்மம்  இருந்ததில்லை . உடல்  மீது  அமர்ந்திருக்கும்  கொசுவை  விரட்டுவதில்  அமைந்துள்ளது  என்  இப்பொழுதைய  சுதந்திரம் .              வளத்தூர் தி .ராஜேஷ் . திண்ணை ,நண்பர்களுக்கு அன்பின் நன்றிகள்