நாளை ?-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை
http://puthu.thinnai.com/?p=3439
திண்ணை ,நண்பர்களுக்கு அன்பின் நன்றிகள்
http://puthu.thinnai.com/?p=3439
காத்திருக்கும்
இறுதி கொண்ட
வாழ்வை
மற்றவர்கள்
தீர்மானிக்க
என் பிறப்பின்
உறுதி
இருள் கொண்ட
ஒளியினை
கொண்டது .
அதன் அசைவுகள்
கட்டளை இடும்
முன்னரே
மறுத்துவிடுகிறது
சுய ஒளி.
அதன்
நிறப்பிரிகை
கவன சிதறலாகிறது.
கணமேற்றும் நாட்களை
என் பருவங்கள்
கூட
அறிந்திருக்கவில்லை .
குற்றசாட்டின் உண்மை
குற்றங்களில்
ஒருபோதும்
இருந்ததில்லை
சட்டங்கள் இயற்றும்
மேதமையில்
இருக்கபோவதில்லை
மனிதம் மறக்க
செய்யும்
மனித நேயத்தில்
மலிந்து கிடக்கிறது .
மக்களின் பெருங்கூட்டம்
இரைச்சலின் மிகுதி
வருத்தம் கொள்ளும்
அன்பின் பரிதவிப்பு
யாவும் என்னை
சேர்வதற்கு முன்பாக
நாளை
ஒன்று
இருக்க வேண்டுமே ?
உன்னை போல
பகை கொண்ட வன்மம்
இருந்ததில்லை .
உடல் மீது
அமர்ந்திருக்கும்
கொசுவை
விரட்டுவதில்
அமைந்துள்ளது
என்
இப்பொழுதைய
சுதந்திரம் .
வளத்தூர் தி .ராஜேஷ் .
Comments
Post a Comment