கூறியிருக்கவில்லை
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை
இன்று இருப்பதை
கவனமாக
பரிசோதித்து
கொள்கிறேன்
ஒவ்வொன்று
செயலும்
காலத்தின்
பிரதிபலிப்பை
காட்டி கொடுத்து
விட கூடும் .
முன்பு இருந்தவையை
விட அதிக
எச்சரிக்கை
தேவைப்படுகிறது
என் மனதின்
மவுனத்திற்கு.
தீவிரப்படுத்தும் கருத்தை
நொடியின் மீதே
கடந்து விடுகிறது
என் ஒவ்வொரு
செயலும் .
விளைகின்ற யாவும்
மற்றவர்களை போல
என்னை சேராமல்
இருக்க கடவுது.
இவை அனைத்தும்
என்றேனும் ஒன்றை
உங்களிடம்
கூறியிருப்பதை
ஏற்றுகொண்டிருக்கக் கூடும்
மறுத்திருக்கவும் செயலாம்.
அதை விட
மிகவும் எளிதானது
நான் எதுவும்
கூறியிருக்கவில்லை
என்பது தான் .
-வளத்தூர் தி .ராஜேஷ்
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment