உறக்கமற்ற இரவு-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான இருபத்தி ஒன்பதாம் கவிதை .
http://puthu.thinnai.com/?p=5702
http://puthu.thinnai.com/?p=5702
நம் சந்திப்புகளின்
கோர்வையை
எளிதாக சொல்லிவிட
முடிகிறது
இந்த காலத்திருக்கு .
உன் புன்னகையின் உலா
வீற்றிருப்பதை
இந்த மாலையும்
மயங்கி கிடக்கிறது .
நம் இரவினையும்
விட்டு வைக்கவில்லை
நினைவுகள்
மவுன மன ஒலிகளை
கடத்துகிறது
உன்னிடமாகவும்
என்னிடமாகவும்
இரவு
ஓய்ந்து விட்டிருக்கிறது .
உன்னிடம்
சொல்வதற்காக
விட்டு வைத்திருக்கிறது
விடியல்
அவை ஒவ்வொன்றாக
பட்டியலிட்டிருக்கிறது
உறக்கமற்ற இரவுவின்
நம் கனவின் மீதங்களை .
இதற்காகவே அன்றும்
பிரபஞ்சம் இருந்திருகின்றது .
-வளத்தூர் தி .ராஜேஷ் .
அன்பின் நன்றி திண்ணை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment