உள்ளொளி
முன் நொடியில்
இருள் கொண்ட அறையில்
சுடர் அசைவில்
நானும் நிழலும்
நிறைந்து கொண்டிருந்தோம் .
பின் நொடியில்
அண்டம் உமிழ்ந்த ஒளியில்
நானும் நிழலும்
பெருவெளியின் இருப்பைக் கொண்டு
அலைந்து கொண்டிருந்தோம் .
முன்னும் பின்னும்
நிழலுக்கு நான்
என்றைக்கும் தேவையாய் இருக்கவில்லை .
அதுவும்
உள்ளொளிக்கு .
-வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment