முற்றும்.

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை 




முன் பெற்ற காலமொன்றில் 
தன் நிலையினை  அளவிடுவதற்கு 
தூற்றும் நினைவினை கொண்டு 
எடுத்து ஆளும் நிறைவு உண்டு .

முதல் அன்பின் வீச்சு 
பார்வையை கூச 
செய்த தன்மை 
இனி 
வருவதற்கில்லை 
இயங்காமல் போன 
காலமொன்றில் 
சேகரித்து வைக்கிறேன் 
முதலின்
அனைத்தும் .

இங்கு தான் 
முதன் முதலாக 
நியாயப்படுத்தி கொள்கிறது 
பல நிலைகளுடைய 
தன் சுய விருப்பங்கள் .
நீள்கின்ற அவைகளை 
சுய தொன்மை சுருக்கி விட்டது 
பல மாலை பொழுதின் 
கண்ணீரோடு .

இன்றளவும் 
நினைவின் வடுவும் 
உறுதி செய்கிறது 
அவையை.
யாரும் பார்த்திராத 
துரோக மவுனத்தின் 
அணைப்பில் 
புகலிடம் எய்தினேன் .
இங்கு தான் 
முதல் 
அகமகிழ்வையும் ,அகதுயரத்தையும் 
கடந்தேன் .

மறுப்பதற்கு மறத்தல்
ஒன்றே 
இன்னும் 
மன்னித்து கொண்டிருக்கிறது 
முன் பெற்ற காலமொன்று .

விலகிய மவுனம் 
இன்னும் 
கலைந்து விடவில்லை 
அதை அப்படியே 
உயிர்ப்புடன்  
வைத்திருக்கிறேன் 
நினைவுகளின் தொகுப்பில் .

கடந்து விட்ட அனைத்தையும் 
பழியை நான் சுமக்கிறேன் 
அதுவே இன்னும் என் 
சுய இயல்பாகிறது .
முற்றும் .

பின் பெற்ற காலமொன்றில் 
எனக்கான முதல் 
அக நினைவின் விதை
துளிர்க்க 
பிரபஞ்சத்தின் செய்கை 
இனி நாமாவோம்.
                           வளத்தூர் தி.ராஜேஷ் 
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு