அன்பின் நிலை
குற்றமிழைத்த அன்பின் மிகுதியை
எதனினும் கொண்டும் ஏற்புடையாகாது பரிதவிக்கும் மவுனத்தின் இடப்பெயர்ச்சி
மன வலி கொண்டு வளர்த்தெடுக்கிறது
அதனதன் தனிமை .
இதுவரையில் என்னிடம் உருவாகியிராத
புன்னைகையும் கண்ணீரையும்
நேசங்களில் வளப்படுத்திய முக்காலமும்
தூற்றி கொண்டிருக்கிறது என் செயலை
அதன் நம்பிக்கையில் தோற்றி கொண்டிருக்கிறது
என் கொடூர புன்னகையும் கண்ணீரும் .
புற நோக்குதல் யார்க்கும் அறிந்தவையே
அதன் சந்தேகத்தின் பரவல் மிகைப்படுத்த
செயலும் பொய்யும் நுட்ப பெரு வெளியில்
நொடிகளின் இயக்கத்தில் மிதந்து
கொண்டிருக்கிறது .
இப்பொழுதைய நீள்கின்ற நெஞ்சத்தின்
மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது
மன விடை பெறுகின்ற அனைத்திலும்
முதல் நேசிப்பின் விதை உன்னிடமே
விருட்சமாகும் .
உந்தன் நிலையை போல எந்நிலையும்
அமைந்திருக்க சற்று கூடுதலான பரிதவிப்பில்
நம் நிறைவேறாத கனவினை விடிய செய்கிறது
புதிய பிரபஞ்சம் .
அன்பின் நிலை எந்நிலையையும் தாங்கி
கொள்ள கூடியதாக அமைந்து விடுகிறது .
தி .ராஜேஷ்
அன்பின் நிலை எந்நிலையையும் தாங்கி
ReplyDeleteகொள்ள கூடியதாக அமைந்து விடுகிறது ..
Nice..
மிக்க நன்றி அண்ணி .
ReplyDelete