அன்பின் நிலை





குற்றமிழைத்த அன்பின் மிகுதியை 
எதனினும் கொண்டும் ஏற்புடையாகாது 
பரிதவிக்கும் மவுனத்தின் இடப்பெயர்ச்சி 
மன வலி கொண்டு வளர்த்தெடுக்கிறது 
அதனதன் தனிமை .

இதுவரையில் என்னிடம் உருவாகியிராத 
புன்னைகையும் கண்ணீரையும் 
நேசங்களில் வளப்படுத்திய முக்காலமும் 
தூற்றி கொண்டிருக்கிறது என் செயலை 
அதன் நம்பிக்கையில் தோற்றி கொண்டிருக்கிறது 
என் கொடூர புன்னகையும் கண்ணீரும் .

புற நோக்குதல் யார்க்கும் அறிந்தவையே 
அதன் சந்தேகத்தின் பரவல் மிகைப்படுத்த 
செயலும் பொய்யும் நுட்ப  பெரு வெளியில் 
நொடிகளின் இயக்கத்தில் மிதந்து 
கொண்டிருக்கிறது .


இப்பொழுதைய நீள்கின்ற நெஞ்சத்தின் 
மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது 
மன விடை பெறுகின்ற அனைத்திலும் 
முதல் நேசிப்பின் விதை உன்னிடமே 
விருட்சமாகும் .

உந்தன் நிலையை போல எந்நிலையும்
அமைந்திருக்க சற்று கூடுதலான பரிதவிப்பில் 
நம் நிறைவேறாத கனவினை விடிய செய்கிறது 
புதிய பிரபஞ்சம் .

அன்பின் நிலை எந்நிலையையும் தாங்கி 
கொள்ள கூடியதாக அமைந்து விடுகிறது .

                                                         தி .ராஜேஷ் 

Comments

  1. அன்பின் நிலை எந்நிலையையும் தாங்கி
    கொள்ள கூடியதாக அமைந்து விடுகிறது ..

    Nice..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு