கூறுமளவுக்கு.











எதையும் கூறுமளவுக்கு இன்னும் 
ஒன்றும் நடக்கவில்லை 
அதாவது நான் எண்ணிய வாழ்வு 
அப்படிப்பட்டது .

ஏற்கனவே நிறைந்துள்ள நிர்பந்தம் 
அனுகூலமாக இருந்தாலும் 
புதிய செயலாக்கம் வெறும் 
கற்பனை அளவிலாவது இருப்பது 
உங்களுக்கும் நல்லதாகிறது.

பின்பற்றும் வெறுமைக்கு பலவீனம் 
இருக்குமானால் நான் அதுவாக மாறவே 
விருப்பம் கொள்வேன் 
சில காலத்திற்கு மட்டும் .

சில கனமேற்றும் நினைவுகளை 
கூடுமானவரை போற்றாமல் 
அதன் தன்மையில் வாழ விடுவது 
எளிதானது .
                               -தி .ராஜேஷ் 



Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு