கூறுமளவுக்கு.
எதையும் கூறுமளவுக்கு இன்னும்
ஒன்றும் நடக்கவில்லை
அதாவது நான் எண்ணிய வாழ்வு
அப்படிப்பட்டது .
ஏற்கனவே நிறைந்துள்ள நிர்பந்தம்
அனுகூலமாக இருந்தாலும்
புதிய செயலாக்கம் வெறும்
கற்பனை அளவிலாவது இருப்பது
உங்களுக்கும் நல்லதாகிறது.
பின்பற்றும் வெறுமைக்கு பலவீனம்
இருக்குமானால் நான் அதுவாக மாறவே
விருப்பம் கொள்வேன்
சில காலத்திற்கு மட்டும் .
சில கனமேற்றும் நினைவுகளை
கூடுமானவரை போற்றாமல்
அதன் தன்மையில் வாழ விடுவது
எளிதானது .
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment