மனதின் அழைப்பு .






நெடு நேரமாகவே மனதின் அழைப்பை 
பொருட்படுத்தவில்லை 
உனக்கும் எனக்கும் அவ்வளவு 
தொலைவும் இல்லை .

ஏற்கனவே எதிர்ப்பார்ப்பில் 
இருப்பதால் அலட்சியமான  பெருமிதம் 
கொள்வதற்கு எதுவாக நானும் 
மவுனமாகவே மீண்டுமொரு முறை 
மனதின் அழைப்பை கூறுகிறேன் .

உன் சிறு அசைவில் செவி 
கூர்மையாகவே இருப்பதை 
வேடிக்கையாகவே கருதும் 
எண்ணம் சிறிதும் இல்லை .

தற்பொழுதிய அழைப்பு 
முக்கியத்துவம் இருப்பதாக 
உணர வைக்க முயற்சிக்கிறது 
பொருள் இன்றைய நாளைய 
வாழ்விற்கு அடிதளம் என்றது .

பொருள் சார்ந்த அழைப்பு தான் .

என்றுமே பொருட்படுத்தாத ஒன்றை 
ஏற்று கொள்வது எவ்வளவு துன்பமானது 
பொருள் சேர் என் இயலாமையாக இருப்பது
கண்டுபிடித்து விட்டது இந்த அழைப்பு .

என் பதற்றம் அதிகரிக்கிறது யாரும் 
காணா வண்ணம் பழமை வாய்ந்த 
இயல்பில் தடயம் இன்றி சேர்த்தேன் 
பொருள் சேர் இயலாமை இனி 
எனக்கானது அல்ல என உலகிற்கு 
கூச்சமின்றி அறைகூவல் விடுத்தேன் .

தன் பழியின் தீவரம் என் முன்னோர்கள் மீது 
சுமத்த எனக்கும் வாய்ப்பு வழங்கப்படிருக்கிறது 
அழைப்பின் காரணிகள் மகிழ அதன் மனம் மட்டும் 
தூற்றுகிறது இதுவரை நிர்பந்தத்தில் வாழ்ந்த 
வாழ்வை போற்றுவதற்கு மனம் ஒப்பவில்லை . 

என்ன செய்ய 
மனதின் அழைப்பின் வேகத்திற்கு 
ஒளி ஆண்டுகளும் 
பின் தங்க வேண்டியிருக்கிறது .

                                           -தி .ராஜேஷ் .
                                                                

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு