மனதின் அழைப்பு .
நெடு நேரமாகவே மனதின் அழைப்பை
பொருட்படுத்தவில்லை
உனக்கும் எனக்கும் அவ்வளவு
தொலைவும் இல்லை .
ஏற்கனவே எதிர்ப்பார்ப்பில்
இருப்பதால் அலட்சியமான பெருமிதம்
கொள்வதற்கு எதுவாக நானும்
மவுனமாகவே மீண்டுமொரு முறை
மனதின் அழைப்பை கூறுகிறேன் .
உன் சிறு அசைவில் செவி
கூர்மையாகவே இருப்பதை
வேடிக்கையாகவே கருதும்
எண்ணம் சிறிதும் இல்லை .
தற்பொழுதிய அழைப்பு
முக்கியத்துவம் இருப்பதாக
உணர வைக்க முயற்சிக்கிறது
பொருள் இன்றைய நாளைய
வாழ்விற்கு அடிதளம் என்றது .
பொருள் சார்ந்த அழைப்பு தான் .
என்றுமே பொருட்படுத்தாத ஒன்றை
ஏற்று கொள்வது எவ்வளவு துன்பமானது
பொருள் சேர் என் இயலாமையாக இருப்பது
கண்டுபிடித்து விட்டது இந்த அழைப்பு .
என் பதற்றம் அதிகரிக்கிறது யாரும்
காணா வண்ணம் பழமை வாய்ந்த
இயல்பில் தடயம் இன்றி சேர்த்தேன்
பொருள் சேர் இயலாமை இனி
எனக்கானது அல்ல என உலகிற்கு
கூச்சமின்றி அறைகூவல் விடுத்தேன் .
தன் பழியின் தீவரம் என் முன்னோர்கள் மீது
சுமத்த எனக்கும் வாய்ப்பு வழங்கப்படிருக்கிறது
அழைப்பின் காரணிகள் மகிழ அதன் மனம் மட்டும்
தூற்றுகிறது இதுவரை நிர்பந்தத்தில் வாழ்ந்த
வாழ்வை போற்றுவதற்கு மனம் ஒப்பவில்லை .
என்ன செய்ய
மனதின் அழைப்பின் வேகத்திற்கு
ஒளி ஆண்டுகளும்
பின் தங்க வேண்டியிருக்கிறது .
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment