அதன் தொடர்ச்சி முறையே
உள்ளமெங்கும் வழிந்தோடும்
தவிப்புகளை எழுதியும்
தீராத பக்கங்கள் இவை
எழுதிய பின்
எழுகின்ற சில நிமிட
நிறைவை
நிலைநிறுத்தி கொள்ளும்
பொருளற்ற
நேரமின்மையும்
சற்று ஆறுதல்
அடைய செய்கிறது .
சற்றும் பொருத்தம்
இல்லாத ஒரு உருவகம்
ஒன்று இதில்
விதைக்கப்படுகிறது
வேருன்றி அவையாகவே
தோற்றமளிக்கிறது .
இயல்பின் அவமதிப்பு
கூடுமானவரை
உங்கள் வரையறையில்
விட்டு வைக்காது
மன திரை .
விழுந்த காட்சிகள்
மறைந்து நின்றாலும்
நிலைத்து நின்று
எதிரொலிக்கிறது
அனுமானங்களின்
மிச்சங்கள் .
அதன் தொடர்ச்சி முறையே ..
மிச்சம் இருக்கின்ற
பழியின் தீரம்
ஒவ்வொன்றாக
கொலை செய்வதற்கு
முன்பாக ஒரு
புன்னகை பூக்கிறது .
வாரத்தைகள்
தன் வன்மத்தை
தேடி கொள்கிறது
வடுவின்
நினைவு பொக்கிஷமாக
மாற்றுவதற்காக .
-வளத்தூர் .தி.ராஜேஷ் .
Comments
Post a Comment