அதன் தொடர்ச்சி முறையே




உள்ளமெங்கும் வழிந்தோடும் 
தவிப்புகளை எழுதியும் 
தீராத பக்கங்கள் இவை 

எழுதிய பின் 
எழுகின்ற சில நிமிட
நிறைவை 
நிலைநிறுத்தி கொள்ளும்   
பொருளற்ற 
நேரமின்மையும் 
சற்று ஆறுதல் 
அடைய செய்கிறது .

சற்றும்  பொருத்தம் 
இல்லாத ஒரு உருவகம் 
ஒன்று இதில்
விதைக்கப்படுகிறது 
வேருன்றி அவையாகவே 
தோற்றமளிக்கிறது .

இயல்பின் அவமதிப்பு 
கூடுமானவரை 
உங்கள் வரையறையில் 
விட்டு வைக்காது 
மன திரை .

விழுந்த காட்சிகள் 
மறைந்து நின்றாலும் 
நிலைத்து நின்று 
எதிரொலிக்கிறது 
அனுமானங்களின் 
மிச்சங்கள் .

அதன் தொடர்ச்சி முறையே ..

மிச்சம்  இருக்கின்ற
பழியின் தீரம் 
ஒவ்வொன்றாக 
கொலை செய்வதற்கு  
முன்பாக ஒரு 
புன்னகை பூக்கிறது .

வாரத்தைகள்  
தன் வன்மத்தை 
தேடி கொள்கிறது 
வடுவின்
நினைவு பொக்கிஷமாக   
மாற்றுவதற்காக .

                        -வளத்தூர் .தி.ராஜேஷ் .



Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு