பகுப்பாய்வின் நிறைவு




இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை 
கவனமற்று இருக்கின்ற 
அனைத்து
இருப்பு கொள்கைகள் 
எழுகின்ற
கேள்வியை 
பற்றிக்கொள்கிறது 
தன் முனைப்பு .

கேள்விகள் அழகியல் 
தன்மை வாய்ந்தவை 
கூடுதலான 
மனத்திரை உடையவை 
முக்காலத்திலும் 
தொன்றுத்தொட்டு 
வழக்கம் உடையவை .

அதன் விடையில் 
நிறைவு பெறாது 
அடுத்த நிலைக்கு 
ஆயுத்தப்படுத்தும் 
மற்றுமொரு கேள்விகள் 
தொடர்கின்ற அழகியல் 
இயக்கமாகிறது .

தன் பகுப்பாய்வின் 
தீவிரத்தன்மை ஒவ்வொன்றும் 
அர்த்தமுள்ளதாக 
மாற்றுகிறது கற்பனையின் 
வரையறைகள் .

கேள்விகளும்  பதில்களும்  
ஒன்றையே  
தேடுதலின் நோக்கமாக 
கொண்டுள்ளது 
அவை 
எப்பொழுதும் 
நிறைவு தன்மை 
உடையவனோ ?
                -வளத்தூர் தி.ராஜேஷ் .
                        
அன்பின் நன்றிகள் திண்ணை .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு