நீ



தொடக்கமும்
முடிவும்
புரியாத
நிலை உனக்கு .


உன்னை பற்றி
பல கதைகளும்
நிரூபணங்களும்
இங்கு ஏராளம் .


இருந்தும்
யாருக்கும்
தெரியாது
என்ற துணிவில்
இருக்கும் நீ.


இதுவே உன்னை
நிரூபிக்க
போதுமாகிறது
எனக்கு .


எதற்கு எல்லாம்
இவை பொருந்துமோ
அவையெல்லாம்
நிரம்புகிறது உந்தன்
நிறைவுகளுடன் .
        -
தி .ராஜேஷ் 


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு