மெய்யாகும் சூழ்.









வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே 
நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம் 
செய்யப்பட்டு வந்திருக்கிறது 
உனது எனது பேதமில்லை 
ஒன்றிலிருந்து ஒன்றாக 
ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும் 
நிர்பந்தங்கள் எப்பொழுது அவிழ கூடும் .
காண்கின்ற எல்லாவற்றிலும் 
கேள்விகளும் பதில்களும் 
இவையாகவே தொற்றி  கொண்டிருக்கிறது .


இது வரை தோன்றிடாத எண்ணங்களில் 
அடங்கி இருப்பவையாக கருதப்படும் 
அதன் இயக்கங்கள் யாவற்றிலும் 
நம் இப்பொழுதைய சிந்தனைகள் கொஞ்சமேனும் 
அடித்தளமிட்டு பரிகாசித்து கொண்டிருக்கும் .


கூற்றின் அறம் பொய்க்குமாயின்
தவறின் கொள்கைகள் நியாயப்படுத்த 
காரணங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது 
சூழ்ந்து இருக்கும் நிலை கூட அவ்வாறே 
தோற்றமளித்து கொண்டிருக்கிறது 
இன்றளவும் .


செய்து கொண்டிருப்பவை அனைத்தும் 
அகத்தின் மெய்யை உரமேற்று கொண்டிருப்பவை 
ஒளிகளின் பார்வையை அதன் நிழல் கொண்டு 
வழிப்பட்டு வந்தவை ஒளியாகவே உணரும் 
காலத்தின் சூழ் மெய்யாகும் .

                                   -தி .ராஜேஷ் 







Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு