எதற்கும் நீ விலகி இரு உன்னிடமே .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
இதுவரையிலும் முழுமையாக
நீ புரிந்து கொண்ட
உறவு உருவாகியிருக்கவில்லை .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
உன்னை புரிந்து கொள்கின்ற
உறவும் இது வரையிலும்
நம்பிக்கையாகவில்லை .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
தன் முன்னோர்களை எளிதாக
பழியை சுமத்த உன் வழிகளை
எளிமைப்படுத்தி இருக்கிறார்கள் .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
உன் குற்றங்களுக்கான
தண்டனை ஒரு போதும்
நீ பெற்றிருக்கவில்லை .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
உன் சுயங்களை நீ
இதுவரையிலும்
அறியவும் இல்லை
இருப்பதை
ஒத்து கொண்டதும்
இல்லை .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
உன்னை பற்றிய
பிம்பம் தோன்றாத கனவில்
நீ இருப்பதை ஒரு போதும்
ஏற்றுக்கொண்டது இல்லை
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
உன்னை பழிக்கும்
பொய்மையை
வளர்த்தெடுக்கவே
தன் உண்மைகளை
மாய்த்து விடுகிறாய்
வெட்கமின்றி .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
பரிணமிக்கும் தனிமையை
நீ தொகுப்புகளாக சேர்த்து
கொள்வதென்பது
வாழ்வியலின் இயக்கத்தை
பெற்று இருக்கிறாய் .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
எதையும் குறிப்பிட ஒன்றும்
இல்லையென்றாலும்
இதோ உனக்காகவே
எழுதப்படும் இந்த சொற்கள்
புனிதத்தன்மை உடையவை .
எதற்கும் நீ விலகி இரு
உன்னிடமே .
-வளத்தூர் தி .ராஜேஷ் .
Comments
Post a Comment