எதற்கும் நீ விலகி இரு உன்னிடமே .





எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

இதுவரையிலும் முழுமையாக 
நீ புரிந்து கொண்ட 
உறவு உருவாகியிருக்கவில்லை .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

உன்னை புரிந்து கொள்கின்ற 
உறவும் இது வரையிலும் 
நம்பிக்கையாகவில்லை .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

தன் முன்னோர்களை எளிதாக 
பழியை சுமத்த உன் வழிகளை 
எளிமைப்படுத்தி இருக்கிறார்கள் .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

உன் குற்றங்களுக்கான 
தண்டனை ஒரு போதும் 
நீ பெற்றிருக்கவில்லை .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

உன் சுயங்களை நீ 
இதுவரையிலும் 
அறியவும் இல்லை 
இருப்பதை 
ஒத்து கொண்டதும்
இல்லை .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

உன்னை பற்றிய 
பிம்பம் தோன்றாத கனவில் 
நீ இருப்பதை ஒரு போதும் 
ஏற்றுக்கொண்டது இல்லை 

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

உன்னை பழிக்கும்
பொய்மையை 
வளர்த்தெடுக்கவே 
தன் உண்மைகளை 
மாய்த்து விடுகிறாய் 
வெட்கமின்றி .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

பரிணமிக்கும் தனிமையை 
நீ தொகுப்புகளாக சேர்த்து 
கொள்வதென்பது 
வாழ்வியலின் இயக்கத்தை 
பெற்று இருக்கிறாய் .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .

எதையும் குறிப்பிட ஒன்றும் 
இல்லையென்றாலும்
இதோ உனக்காகவே 
எழுதப்படும் இந்த சொற்கள் 
புனிதத்தன்மை உடையவை .

எதற்கும் நீ விலகி இரு 
உன்னிடமே .
                           -வளத்தூர் தி .ராஜேஷ் .
 




Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு