தனிமை
இப்பொழுதைய இந்த
தனிமை நிமிடங்களை
எச்சரிக்கை மிகுந்த
தருணமாக
மாற்றியமைக்கிறது
காலம் .
தனித்திருப்பது ஒன்றும்
அபாயகரமானது அல்ல
அதன் சிந்தனை முறையை
அதனதன் முறையே
நிகழ செய்யும் ஒன்றை
எப்பொழுதும்
செய்யவிட்டதில்லை
காலம் .
சுயங்கள் பின்னப்பட்டிருக்கும்
முடிச்சுகளை தனிமையின்
ஏதோ ஒரு நொடிகளும்
அதன் காலமும்
விடுவிக்க காத்திருக்கிறது .
நொடிகளின் இடப்பெயர்வு
நினைவலைகளை
சிதறடிக்கிறது .
அதன் பிம்பங்கள்
அச்சம் தரும் விதமாக
சிரிக்கிறது .
தனிமை அதன் மவுனத்தின்
உட்புகுதலில்
கூக்குரலிடுகிறது .
காற்றின் இடப்பெயர்ச்சிக்கு
இங்கு வேலையில்லை .
-வளத்தூர் தி .ராஜேஷ் .
Comments
Post a Comment