தனிமை







இப்பொழுதைய இந்த 
தனிமை நிமிடங்களை 
எச்சரிக்கை மிகுந்த  
தருணமாக
மாற்றியமைக்கிறது 
காலம் .

தனித்திருப்பது ஒன்றும் 
அபாயகரமானது அல்ல 
அதன் சிந்தனை முறையை 
அதனதன்  முறையே 
நிகழ செய்யும் ஒன்றை 
எப்பொழுதும் 
செய்யவிட்டதில்லை 
காலம் .

சுயங்கள் பின்னப்பட்டிருக்கும் 
முடிச்சுகளை தனிமையின் 
ஏதோ ஒரு நொடிகளும் 
அதன் காலமும் 
விடுவிக்க காத்திருக்கிறது .

நொடிகளின் இடப்பெயர்வு 
நினைவலைகளை 
சிதறடிக்கிறது .

அதன் பிம்பங்கள் 
அச்சம் தரும் விதமாக 
சிரிக்கிறது .

தனிமை அதன் மவுனத்தின் 
உட்புகுதலில் 
கூக்குரலிடுகிறது .
காற்றின் இடப்பெயர்ச்சிக்கு 
இங்கு வேலையில்லை .

                               -வளத்தூர் தி .ராஜேஷ் .



Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு