பிரபஞ்ச ரகசியம் -திண்ணை,

திண்ணையில் வெளியாகும் எனது இருபத்தி ஐந்தாவது கவிதை
நண்பர்கள் அனைவருக்கும் அன்பின் நன்றிகள் .



மனம்  தோன்றா 
காலத்தில் 
என்னிடம் 
பறிக்கப்பட்டுவிட்டது 
பிரபஞ்ச ரகசியம் .
அதன் பிறகே 
பரிணாமம் 
அடைய 
விட்டிருக்கிறது 
காலம் .

காண்கின்ற யாவற்றிலும் 
ரகசியங்களாக 
மாறுகிறது 
சுய தேடல்கள் .

இந்த உயிரின் 
இறுதியும் 
இவ்வாறே இருக்க 
உலவ விட்டிருக்கிறது 
அந்த ரகசியம் .
இதன்  முறையே 
பிறப்பிக்கப்பட்ட 
ஒரு கட்டளை 
உணர்வதற்குள் 
ஒவ்வொரு செயலின் 
அறியாமை 
கடந்து விடுகிறது .

பிரபஞ்ச எண்ணங்கள் 
அனைத்துமே  
உனதாக்கினேன் 
அதுவே அகமகிழ்வு 
என்றே வளர்ந்தேன் 
உணர்ந்த பின்  
உன்னில்  நான் இருப்பதை 
என்னில்  
கொண்டு வர 
முடிவிலி கொண்டே 
அனைத்தையும் 
நோக்குகிறேன் 
இதில் தவற விடப்படும் 
பிரபஞ்ச  ரகசியம் 
அனைத்தும் 
நானாகிறேன் .
      -வளத்தூர் தி.ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை