பிரபஞ்ச ரகசியம் -திண்ணை,
திண்ணையில் வெளியாகும் எனது இருபத்தி ஐந்தாவது கவிதை
நண்பர்கள் அனைவருக்கும் அன்பின் நன்றிகள் .
நண்பர்கள் அனைவருக்கும் அன்பின் நன்றிகள் .
மனம் தோன்றா
காலத்தில்
என்னிடம்
பறிக்கப்பட்டுவிட்டது
பிரபஞ்ச ரகசியம் .
அதன் பிறகே
பரிணாமம்
அடைய
விட்டிருக்கிறது
காலம் .
காண்கின்ற யாவற்றிலும்
ரகசியங்களாக
மாறுகிறது
சுய தேடல்கள் .
இந்த உயிரின்
இறுதியும்
இவ்வாறே இருக்க
உலவ விட்டிருக்கிறது
அந்த ரகசியம் .
இதன் முறையே
பிறப்பிக்கப்பட்ட
ஒரு கட்டளை
உணர்வதற்குள்
ஒவ்வொரு செயலின்
அறியாமை
கடந்து விடுகிறது .
பிரபஞ்ச எண்ணங்கள்
அனைத்துமே
உனதாக்கினேன்
அதுவே அகமகிழ்வு
என்றே வளர்ந்தேன்
உணர்ந்த பின்
உன்னில் நான் இருப்பதை
என்னில்
கொண்டு வர
முடிவிலி கொண்டே
அனைத்தையும்
நோக்குகிறேன்
இதில் தவற விடப்படும்
பிரபஞ்ச ரகசியம்
அனைத்தும்
நானாகிறேன் .
-வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment