குற்றங்கள்-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை
http://puthu.thinnai.com/?p=2611
குற்றத்தினை கையாள்வது
அன்பின் நன்றிகள் திண்ணை,நண்பர்களுக்கு
http://puthu.thinnai.com/?p=2611
குற்றத்தினை கையாள்வது
மிகவும் அசாதரமானது
ஆனாலும்
அனைவரும் எளிதாக
கடந்து விட கூடிய
இயல்பாகி விட்டது .
குற்றங்கள் எப்பொழுதும்
தனித்து விடப்பட்ட
தன்மையை
பெற்றிருப்பதால்
அதனை
நீங்களும் நானும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை .
எந்தன் குற்றத்தினை
உங்களின் குற்றங்களுடன்
இப்பொழுது
சேர்த்து கொள்கிறேன்
நீங்கள் எதுவுமே
கேட்கப்போவதில்லை
அதற்கான அவசியம்
என்றுமே
இருக்கப்போவதில்லை .
உணர்த்துவதற்கு என்று
படைக்கப்பட்ட மனம்
தொலைந்து விட்டதை
குற்றங்கள் மட்டுமே
அறிந்திருக்கிறது .
நானும் நீங்களும்
ஒன்றிணைப்பது
மனித உயிரினத்தால்
அல்ல
குற்றங்களினால் .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை,நண்பர்களுக்கு
Comments
Post a Comment