குற்றங்கள்-திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை 
http://puthu.thinnai.com/?p=2611




குற்றத்தினை கையாள்வது 
மிகவும் அசாதரமானது 
ஆனாலும் 
அனைவரும் எளிதாக 
கடந்து விட கூடிய 
இயல்பாகி விட்டது .

குற்றங்கள் எப்பொழுதும் 
தனித்து விடப்பட்ட 
தன்மையை 
பெற்றிருப்பதால் 
அதனை 
நீங்களும் நானும் 
அறிந்திருக்க வாய்ப்பில்லை .

எந்தன் குற்றத்தினை 
உங்களின் குற்றங்களுடன் 
இப்பொழுது 
சேர்த்து கொள்கிறேன் 
நீங்கள் எதுவுமே 
கேட்கப்போவதில்லை 
அதற்கான அவசியம் 
என்றுமே 
இருக்கப்போவதில்லை .

உணர்த்துவதற்கு என்று 
படைக்கப்பட்ட மனம் 
தொலைந்து விட்டதை 
குற்றங்கள் மட்டுமே 
அறிந்திருக்கிறது .

நானும் நீங்களும் 
ஒன்றிணைப்பது 
மனித உயிரினத்தால் 
அல்ல 
குற்றங்களினால் .
                      -வளத்தூர் தி.ராஜேஷ் .


அன்பின் நன்றிகள் திண்ணை,நண்பர்களுக்கு 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு