சிற் சில கனவுகளின் கானல்-உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6034


தன் இருண்மையின் அகழியில்
பயணம் செய்கிறது சுயம் .
பெருவெளியெங்கும் தன் மவுனத்தை
தூது அனுப்பி கொண்டிருக்கிறேன்
அவை ஆதியின் முதல் மவுனத்தில்  சரண் புகும் .
எதையும் உடைத்தெறிக்கும் முன்
என் அடக்கமுறையின் மவுனத்தின் கணம்
எதையும் செய்து விட கூடும்
கூடுதல் எச்சரிக்கை தேவைப்படுகிறது
பிறிதொரு மவுனத்தில் .

அண்டமெங்கும் சரிய
அதன் விளிம்பில் தொற்றிக்கொண்டிருக்கும்
தன் வினையை சான்றாக்குகிறேன்.
என் தயக்கத்திற்கு என்று
ஓர் மவுனத்தை அணிந்து கொண்டிருக்கிறேன்
அதில் எப்பொழுதும் உன் பிரதிபலிப்பே காணுகிறேன் .
ஐம்புலன்களும் நிர்ணியம் செய்து கொண்டிருக்கும்
காலத்தில் இருந்து விலகி இன்னும் பிற சாத்தியங்களை
கொண்டு உருவாக்கப்படும் இருப்பை
அகத்தில் வழிபட்டு கொண்டிருக்கிறேன் .

நிழலற்ற ஒளி எங்கும் பரவ
மெல்லியதொரு மவுனம் இரவாகிறது .

இதோ பொழிகின்ற தூறலின் தொன்மை
எந்த காலத்தின் நினைவுகள் .


பிரபஞ்ச துருவங்கள் தொடர்ந்து சலனபடுத்த
மித மிஞ்சிய உணர்தலை என்ன செய்வது
பல அடுக்குகள் உள்ள உன் உருவகத்தில்
எதனை பற்றியது என் வழங்கல்.


என் வெற்றிட சொற்களில்
இல்லாமையின் இருப்பின் உணர்தல்
நிறைவு செய்து வண்ணம் இருக்கிறது மனம் .

--------------------------------------------------------------------------------

நேற்றைய கனவுகளில் மேற்கொண்டு
பேச இன்றைய விடியலும் நீள்கிறது .
எப்பொழுதும் உன் சூடிய பார்வையில்
கரைந்து விடும் நான்
சில காலங்களை
உனக்காகவே விட்டு வைத்திருகிறாய்.


என் பேச்சுக்களில் அத்தனை இயல்பு தன்மை
இருப்பதில்லை
இருந்தும் நீ கேட்டு கொண்டே இருக்கிறாய்
 தன் முனைதலின் ஒலி
உன் வழியாகவே பிரபஞ்சத்தை எட்டுகிறது
.

இதன் முறையாக பிற காலங்களை
ஆங்காங்கே தூவி வருகையில் என் நிலை ?அதில்
என் வெட்கத்தையும் மையிட்டு காண்
எனக்கென்று உள்ள உணர்தலில் நாம் .

அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு