சுயம்





என் ஒவ்வொரு வெளியேற்றத்திலும்
தன் இயல்பு மறைக்கப்படுவதை சுயம் 
இதுவரை அறிந்திருக்கவில்லை 
எதையும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை 
நம்பும் காரணிகளும் ஏராளம் இருக்கிறது .

தன் பொழுதை போக்க நேரங்களை 
என்றும் பொருட்படுத்தியதில்லை சுயம்  
இன்று வரை என்னை அறிந்து கொள்ளும் 
காலத்தை ஒதுக்கவே இல்லை .

என்னை தவிர்க்க செய்யும் ஆற்றல் சுயத்திற்கு 
உள்ளதென அறிந்தும் விருப்பம் மட்டும் 
குறைந்தப்பாடில்லை .

மற்றவற்றையை குறிப்பாள் கூட அறிய 
முடிந்ததை என்னை பற்றி மட்டும் 
அறிய 
முடியாமல் போனது என் சுயத்தின் குற்றமே 

சில தனிமைகள் தன் சுயத்தை காட்டினாலும் 
அவை கானல் நீராகவே உணரவைக்கிறது .
சுயம் உணரக்கூடிய ஒன்றாக இருக்கும் 
என் மரணத்தின் மீது குடி புகும் .
இல்லையனில் 
என் கற்பனையை வளர்த்து விடும் துரோகத்தின் 
சின்னமாக எப்பொழுதும் வீற்றிருக்கும் .
                                                                -  தி .ராஜேஷ் .



 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை