சுயம்
என் ஒவ்வொரு வெளியேற்றத்திலும்
தன் இயல்பு மறைக்கப்படுவதை சுயம்
இதுவரை அறிந்திருக்கவில்லை
எதையும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை
நம்பும் காரணிகளும் ஏராளம் இருக்கிறது .
தன் பொழுதை போக்க நேரங்களை
என்றும் பொருட்படுத்தியதில்லை சுயம்
இன்று வரை என்னை அறிந்து கொள்ளும்
காலத்தை ஒதுக்கவே இல்லை .
என்னை தவிர்க்க செய்யும் ஆற்றல் சுயத்திற்கு
உள்ளதென அறிந்தும் விருப்பம் மட்டும்
குறைந்தப்பாடில்லை .
மற்றவற்றையை குறிப்பாள் கூட அறிய
முடிந்ததை என்னை பற்றி மட்டும்
அறிய
முடியாமல் போனது என் சுயத்தின் குற்றமே
சில தனிமைகள் தன் சுயத்தை காட்டினாலும்
அவை கானல் நீராகவே உணரவைக்கிறது .
சுயம் உணரக்கூடிய ஒன்றாக இருக்கும்
என் மரணத்தின் மீது குடி புகும் .
இல்லையனில்
என் கற்பனையை வளர்த்து விடும் துரோகத்தின்
சின்னமாக எப்பொழுதும் வீற்றிருக்கும் .
- தி .ராஜேஷ் .
Comments
Post a Comment