பூரணத்துவம்

ஒன்றின் விருப்பம் 
எதில் இருந்து 
தொடங்கப்பட்டதோ 
அங்கயே முடிவதில் 
ஒரு பூரணத்துவம் 
நிரம்புகிறது ..

அது அவ்வளவு 
சுலபமில்லை 
நாடும் 
விருப்பத்தின் 
மனம் 
நாளும் 
அலைந்தோடுவதால்
எவ்விதம் 
சாத்தியப்படும் இவை .

நிறைவை உண்டாக்க 
அவசியம் 
இல்லையென்றாலும்
பின்பற்றவையில் 
முந்துவது 
இவையே ..

அந்த
ஒன்றினை 
எவ்விதம்
தேர்ந்தெடுப்பது
என 
குழப்பத்தின் 
அதிர்வு 
எல்லையில்லாமல் 
விரிகிறது ..
                -தி .ராஜேஷ் .

Comments

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு