திறவுக்கோல்-திண்ணை.

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை 


http://puthu.thinnai.com/?p=4854


அகம் சார்ந்த 
வாழ்வை
பழித்து விடப்பட்டிருக்கிறது 
ஆதலால் 
முன்னோர்களின் 
வழியின்
திறவுக்கோல் 
வைத்து 
சரிப்பார்த்துக்கொள்ள 
முடிகிறது 
நான் எதிர் கொள்ளும் 
அனைத்தின் விளைவுகளும் .

இதில் 
திறவுக்கோல் 
அளவுகள் 
பரிசோதிக்க 
அவசியம் இருக்கவில்லை 
அனைத்துக்குமான 
நிறைவை 
உள்ளடக்கியது இவை .

என் அகம் 
பிரபஞ்ச தொன்மையில் 
தொலைந்து போயிந்த ஒன்று 
வார்த்தையின் தேடல்களில் 
அவை சிக்குவதில்லை  
மன உணர்வின் 
அதிர்வுகளும் 
அறிவதில்லை .

கிடைக்க பெறாத 
எதுவுமே 
நம்பிக்கையாக்கப்படுவதால்  
அவ்வண்ணமே 
நானும் ஆக்கப்பட்டேன் .

கொடுர நம்பிக்கை கொண்டு  
திறக்கப்பட்ட 
அதன் வினையின் 
கணம் 
மேலும் அழுத்தத்தின் 
வெற்றிடமாகவே 
காட்சிப்படுத்துகிறது 
ஒளிகளின் சேர்ப்பு.

கிடைக்க பெறாத அகமும் 
திறவுக்கோலும்  
அதன் நம்பிக்கைகளும் 
முன்னோர்களின் வழியே 
தேடும் பொருளாக 
உலவுகிறது  என் 
பிரபஞ்ச கனவுகள் .
                      வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு