கூற்றின் நிகழ்.
மன நீர்மத்தின் அகழியில்
சுழன்று கொண்டிருக்கிறது என் நினைவுகள் .
என் பிரிதொரு முகம் அணிந்து
உலவும் பல்நிலை வன்மம்
காத்திருக்கும் இரவில்
ஈடேற்ற
தன் மனதை
உடைத்தெறிக்கிறது.
இனி
வன்மத்தின் முகம் அணிந்து
எங்கும் திரிய வேண்டியது தான் .
சுய தேடலின் விளைவுகளை
முன்னிலைப்படுத்துகிறது
தன் அறியாமை .
பிரபஞ்ச நகர்வின் இடப்பெயர்வில்
எதை தான் அறுதியிட்டு
கூறி கொண்டிருக்க முடியும் .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment