கூற்றின் நிகழ்.

மன நீர்மத்தின் அகழியில்
சுழன்று கொண்டிருக்கிறது
என் நினைவுகள் .

என் பிரிதொரு முகம் அணிந்து
உலவும் பல்நிலை வன்மம்
காத்திருக்கும் இரவில்
ஈடேற்ற  
தன் மனதை
உடைத்தெறிக்கிறது.

இனி
வன்மத்தின் முகம் அணிந்து
எங்கும் திரிய வேண்டியது தான் .

சுய தேடலின் விளைவுகளை
முன்னிலைப்படுத்துகிறது
தன் அறியாமை .

பிரபஞ்ச நகர்வின் இடப்பெயர்வில்
எதை தான் அறுதியிட்டு
கூறி கொண்டிருக்க முடியும் .

 -வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை