தோல்வியின் அக மவுனம்



வீட்டின் சிதைந்த 
கனவுகளில் பல 
இன்னுமும் 
விடியலை நோக்கி 
பயணிக்கிறது 
அவற்றில் ஒன்று 
என் தோல்வியை 
சார்ந்தது .

இன்று வரைக்கும் 
அதற்கான வருத்தம் 
உணரவில்லை 
என் தவறுகள் 
ஒளிந்துகொள்ள 
யாரும் அறியாத 
ஒரு கொள்கையை 
காரணமாக்குகிறேன்.

ஆயாவிடம் 
என் முதல் 
அக மவுனத்தை 
வழங்குகிறேன் 
நீடித்து கொண்டே 
பெருகுகிறது .

அம்மா அப்பா 
அதே அக மவுனத்தை 
என்னிடம் 
வழங்குகிறார்கள்
இங்கு  
கொடுப்பதை 
காட்டிலும்
பெறுவது 
கடினமாகிறது .

அண்ணனும் தம்பியும் 
இவ்வாறாகவே 
தொடர்கிறார்கள் .

தோல்வியின் அமைவு 
இயலாமையை 
காட்டி கொடுப்பதல்ல 
நம்பும் நம்பிக்கையை 
ஈடேற்றுவது என்று 
யாரும் அறிந்திருக்கவில்லை .

நண்பர்களும் சமூகமும் 
பல இழிவுகளை 
என் மீது 
உமிழ தயாராகவே 
இருந்தனர் .

பெற்றிருந்த 
அக மவுனம் 
இறுதி வரையில் 
பாதுகாத்து கொண்டிருந்து .

இப்படியான அழகியல் 
வாய்ந்ததாக 
அமைந்து இருந்தது 
என் +2 
பொது தேர்வின் 
தோல்வி .
              -வளத்தூர் தி.ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு