தோல்வியின் அக மவுனம்
வீட்டின் சிதைந்த
கனவுகளில் பல
இன்னுமும்
விடியலை நோக்கி
பயணிக்கிறது
அவற்றில் ஒன்று
என் தோல்வியை
சார்ந்தது .
இன்று வரைக்கும்
அதற்கான வருத்தம்
உணரவில்லை
என் தவறுகள்
ஒளிந்துகொள்ள
யாரும் அறியாத
ஒரு கொள்கையை
காரணமாக்குகிறேன்.
ஆயாவிடம்
என் முதல்
அக மவுனத்தை
வழங்குகிறேன்
நீடித்து கொண்டே
பெருகுகிறது .
அம்மா அப்பா
அதே அக மவுனத்தை
என்னிடம்
வழங்குகிறார்கள்
இங்கு
கொடுப்பதை
காட்டிலும்
பெறுவது
கடினமாகிறது .
அண்ணனும் தம்பியும்
இவ்வாறாகவே
தொடர்கிறார்கள் .
தோல்வியின் அமைவு
இயலாமையை
காட்டி கொடுப்பதல்ல
நம்பும் நம்பிக்கையை
ஈடேற்றுவது என்று
யாரும் அறிந்திருக்கவில்லை .
நண்பர்களும் சமூகமும்
பல இழிவுகளை
என் மீது
உமிழ தயாராகவே
இருந்தனர் .
பெற்றிருந்த
அக மவுனம்
இறுதி வரையில்
பாதுகாத்து கொண்டிருந்து .
இப்படியான அழகியல்
வாய்ந்ததாக
அமைந்து இருந்தது
என் +2
பொது தேர்வின்
தோல்வி .
-வளத்தூர் தி.ராஜேஷ்
Comments
Post a Comment