எல்லாமுமான என் ஆயா சரோஜாம்மா

எல்லாமுமான என் ஆயா சரோஜாம்மா ,உன் நினைவலைகளில் என்னை மன்னிப்பாயா ? அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது என்று எண்ணுகின்றாயா ? நான் நம்பிக்கை கொண்டுள்ள  அன்பில் தவறும் ,துரோகமும் வளர்த்தெடுக்கப்படுகிறது ஆயா,நீ இல்லாமல் இருப்பதால் இப்பொழுது நடக்கின்ற வாழ்வில் எனக்கு என்னமோ நடந்து கொண்டிருக்கிறது நான் என்ன செய்வேன் ஆயா .என் கண்ணீரில் இருப்பது உன் பிரிவு மட்டும் அல்ல இதை நீ மட்டுமே உணர்வாய் உணர்ந்தும் இருக்கிறாய் .என் வாழ்வின் அடுத்த நிலைக்கு நம் குடும்பம் என்னை தயார் செய்து கொண்டிருக்கிறது .எல்லாமும் அறிந்துள்ள உன்னால் இப்பொழுது தீர்வு சொல்ல முடியாது ஆயா .உன் வழிகாட்டுதலில் ஆண்டுகள் சென்றாலும் நம் பெருங்கனவு உணர்த்தி கொண்டிருக்கிறது .என் ஒவ்வொரு வலிகளிலும் உன் நினைவுகளால் நிறைவு செய்கிறாய் .
அனைத்து உறவுகள் இருந்தாலும் என்னை புரிந்து கொள்கின்ற ஒரே உறவு நீ மட்டுமே ஆயா .என் தனிமை பல விபரீத எண்ணங்களை உருவாக்கிறது என்ன செய்வேன் ஆயா .என் எண்ணங்கள் அனைத்தும் கேட்பதற்கு யாரும் இல்லாததால் பகிர நிறைய இருக்கிறது ஆயா ,சென்ற வாரம் ஊருக்கு சென்றேன் ஆயா வழக்கம் போலவே அப்பா ,அம்மா செயல்பாடுகள் அண்ணனும் அப்படியே .அவ்வளவு தான் ஆனால் நீ இல்லையே ஆயா .என் முக அசைவுகளை வைத்தே நான் எப்படி இருக்கேன் என்று சொல்வாயே அப்படி கேட்க யாருமில்லையே ஆயா என்ன செய்வேன் .நீ ஏன் இப்படி செய்தாய் ஆயா உன் மறைவை எப்பொழுதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆயா .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு