மன்னிப்பதற்கான கனவு -திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை
http://puthu.thinnai.com/?p=3949
தேடும் விழி கொண்டு
http://puthu.thinnai.com/?p=3949
இப்படியாக தான்
வாழ்வியல் கனவு
அமைக்கப்படும் என்று
போதிக்கப்பட்டது .
இதில் இன்னும் நீ
வந்திருக்கவில்லை .
கலைந்து போன
கனவை என்றேனும்
சந்திக்க இருப்பாய்
வன்மம் கொண்ட
காலம் எச்சரித்து
கொண்டிருக்கிறது
அப்பொழுதும் நீ
கண்டிப்பாக
வந்திருக்கவில்லை .
காத்திருக்கும்
அடுத்த நொடி
அனைத்துமாக
நீயாக இருப்பதற்கு
இன்னும் ஒரு வாரம்
கடக்க வேண்டிருக்கிறது ..
ஆதலால் நீ இன்னும்
வந்திருக்கவில்லை .
நம்மை காலம்
இணைத்திருக்குமாயின்
இதையே என் அன்பாக
எற்றுகொள்
இல்லையெனில்
இருக்கவே இருக்கிறது
என் வழக்கமான காலம்
தன் பழியை சுமக்க .
தீர்மானத்தின் தயக்கம்
இருப்பதினால்
நீ இன்னும் இங்கு
வந்திருக்கவில்லை .
உருவாக்குகிறேன்
பல கனவுகளை
மீதமிருப்பது
நினையாமல் விட்ட
சில விழிப்பு மட்டுமே .
இன்னும் விருப்பங்கள்
உறுதியாகவில்லை
அதற்குள்ளாக மெல்ல
படரும் கனவுகளுக்கு
நான் மட்டுமே
பொறுப்பாகிறேன் .
வேறுவழி எனக்கு
தெரியாததால்
இதில் உன் பங்கும்
பாதி இருக்கிறது
மன்னிப்பாயாக .
-வளத்தூர் தி. ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .
கனவு காண ஆரம்பித்து விட்டிற்கள் போல....
ReplyDeleteஆமாம் அண்ணி இது ஒரு வாரத்திற்கு முன்பு எழுதியது அவர்களுக்கான என் முதல் அன்பின் தொடக்கம் இதுவாகவே இருக்கும் .
ReplyDeleteநீங்க இந்த மாதரி பேசி நான் பார்த்ததே இல்லை...
ReplyDeleteஇனி மேல் எல்லாம் அப்படி தான் அண்ணி :)
ReplyDelete