மன்னிப்பதற்கான கனவு -திண்ணை

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை 


http://puthu.thinnai.com/?p=3949


இப்படியாக தான் 
வாழ்வியல் கனவு 
அமைக்கப்படும் என்று
போதிக்கப்பட்டது .
இதில் இன்னும் நீ 
வந்திருக்கவில்லை .

கலைந்து போன 
கனவை  என்றேனும் 
சந்திக்க இருப்பாய்
வன்மம் கொண்ட 
காலம் எச்சரித்து 
கொண்டிருக்கிறது 
அப்பொழுதும் நீ 
கண்டிப்பாக 
வந்திருக்கவில்லை .

காத்திருக்கும் 
அடுத்த நொடி 
அனைத்துமாக 
நீயாக இருப்பதற்கு 
இன்னும் ஒரு வாரம்
கடக்க வேண்டிருக்கிறது ..
ஆதலால் நீ இன்னும் 
வந்திருக்கவில்லை .

நம்மை காலம் 
இணைத்திருக்குமாயின் 
இதையே என் அன்பாக 
எற்றுகொள் 
இல்லையெனில் 
இருக்கவே இருக்கிறது 
என் வழக்கமான காலம் 
தன் பழியை சுமக்க .
தீர்மானத்தின்  தயக்கம் 
இருப்பதினால் 
நீ இன்னும் இங்கு 
வந்திருக்கவில்லை .

தேடும் விழி கொண்டு 
உருவாக்குகிறேன் 
பல கனவுகளை 
மீதமிருப்பது 
நினையாமல் விட்ட
சில விழிப்பு மட்டுமே .

இன்னும் விருப்பங்கள் 
உறுதியாகவில்லை 
அதற்குள்ளாக மெல்ல 
படரும் கனவுகளுக்கு 
நான்  மட்டுமே 
பொறுப்பாகிறேன் .
வேறுவழி எனக்கு 
தெரியாததால் 
இதில் உன் பங்கும் 
பாதி இருக்கிறது 
மன்னிப்பாயாக .
                  -வளத்தூர் தி. ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .

Comments

  1. கனவு காண ஆரம்பித்து விட்டிற்கள் போல....

    ReplyDelete
  2. ஆமாம் அண்ணி இது ஒரு வாரத்திற்கு முன்பு எழுதியது அவர்களுக்கான என் முதல் அன்பின் தொடக்கம் இதுவாகவே இருக்கும் .

    ReplyDelete
  3. நீங்க இந்த மாதரி பேசி நான் பார்த்ததே இல்லை...

    ReplyDelete
  4. இனி மேல் எல்லாம் அப்படி தான் அண்ணி :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு