வன்மம் தீண்டிய நாள்

வளத்தூர் சரோஜாம்மா பேரன்
ராஜேஷ்
இரு வாரம் முன்பு
வன்மம் தீண்டிய ஒரு நாளில்
இறந்தான் .

முதலில் மகா
பின்பு தான்
ராஜேஷ் இறந்தான் .

எதனையும் கேட்பதற்கு
யாருமற்ற நிலையில்
இறந்து கிடந்தோம் .
எங்கள் மரணத்திற்கு
நாங்களே
அழுது தீர்த்தோம் .

இறந்தவர்களின் கண்களில்
கண்ணீர் வழிந்தோடி
கொண்டிருக்க
அவரவரின் கைகளைக் கொண்டே
துயர் நீக்கி கொண்டிருந்தோம்.


                               -வளத்தூர் தி. ராஜேஷ்.

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை