இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை http://puthu.thinnai.com/?p=7166 பொருள் கொண்டு மனிதம் மதிப்பீடு செய்யப்படும் வழிமுறையை பழக்கப்படுத்தி கொள்வதில் இனி சிக்கல் இருக்கபோவதில்லை. மற்றவர்களை உதாரணம் கொண்டு உருவாக்கப்படவில்லை இந்நிலை. ஒரு நீடித்த பகலில் கைவிடப்பட்ட நம்பிக்கையை சுமந்து கொண்டு சுய நீர்மம் நிறைவில் மனதின் அழுத்தங்களை தாங்கி கொள்ள இயலாத நிலையில் என்னையும் ஆட்கொண்டது நாளை உங்களையும் தான் . இனி உயிரினம் வாழ நிர்பந்தங்களை பட்டியல் கொண்டு மன குற்றங்களை மறைத்து மறந்து வாழவே உசித்தம் . அது மிக எளிதான இயல்பு தான் . -வளத்தூர் தி.ராஜேஷ் அன்பின் நன்றிகள் திண்ணை நண்பர்களுக்கு .
இந்த வாரம் உயிரோசையில் வெளியான என் கவிதை http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5200 நான் யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை அப்படி யாரும் இதுவரையில் இருந்திருக்கவில்லை . இப்பொழுது ஏன் விடை பெறுதல் அவசியமாகிறது என்றால் என்னிடமான சுயத்தின் மவுனம் தாங்கி கொள்ள முடியாமல் இருப்பதால் . அதன் கனமேற்றத்தின் அழுத்தங்கள் என்னை எப்பொழுதும் சோதித்து கொண்டிருப்பதால் . என்னை தன் நீர்மம் நிறைந்த பொருளாக மாற்ற முயல்வதால் . என்னை தன் மகிழ்வின் மீது அமர வைப்பதினால் விடை பெறுதல் மனதின் அனைத்துமான ஒன்றாக இருக்க வேண்டும் . அதன் நிலையிலே முதன் முதலாக தன் சுயத்தினை பார்க்க விடை பெறுதல் பெறுவதற்கு நான் யாரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை அப்படி யாரும் இதுவரையில் இருந்திருக்கவில்லை. அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .
Comments
Post a Comment