ஆதியின் முதல் கண்ணிர்.

துயரம் கொண்டிருந்த தன் மவுனம் 
அண்டத்தை சிதற செய்வதற்க்கான
நெகிழ்தல் பெற்றிருக்கிறது  .
எந்த நிமிடங்களிலும்
நிகழ்ந்து விட கூடும் .


தன் கால நினைவில்
அலைவுறும் துயரம்
முடிவிலியை
கொண்டிருக்கிறது .
தொடக்கத்திற்கும் முடிவிற்கும்
இடைப்பட்ட தன் துயரம்
மெல்ல மெல்ல
ஆதியின் முதல் கண்ணிர்  ஆக
பிரபஞ்ச காலங்களை
கடந்து
வழிந்தோடி என்னை
வந்தடைந்தது .

நமக்கான சொற்களை
பிரபஞ்ச உணர்தலின் இணைவு கொண்டே
மொழிப்பெயர்க்கிறது காலம் .

                                - வளத்தூர் தி. ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு