தன் மவுன சிறகுகள்
தன் மன விடுதல் கொண்டு
ஆதியின் மவுனத்தை
இன்னும் அழுத்துகிறது
நூற்றாண்டின் காத்திருப்பு .
காலம் உருக்கி
உருப்பெறுகிறது தன் மவுனம் .
அதில்
தன் தொன்மையில் தொடங்கி
மறைக்கப்பட்ட வன்மம்
எப்பொழுதும் காத்திருக்கிறது .
இருந்தும்
இழந்து விட்ட இரு நிழலின் மூலம்.
தன் நிழல் புகா
எண்ணத்தை வடிவமைக்கிறேன் .
இறுதி
தன் மவுன சிறகுகள்
அண்டமெங்கும்
முளைத்து கொண்டே
விரிகிறது .
-வளத்தூர் .தி. ராஜேஷ் .
Comments
Post a Comment