பிரபஞ்ச தூதின் வருகை .
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை
( அன்பின் விண்ணகி ) க்கானது
பிரபஞ்ச நிழலில்
உறங்கிக்கொண்டிருந்தது
தன் உணர்தலின் கனவு .
விழித்தெழும் கனவில்
பிரபஞ்ச ஒளி
தூது கொண்டு வந்திருக்கிறது .
தன் தொன்மையின் தொடர்ச்சியை
எத்தனை எத்தனை
நூற்றாண்டுகளை கடந்து
சென்றுக்கொண்டிருக்கிறது
இந்த பிரபஞ்ச நகர்தல் என்று .
நம் இருப்பின் அமைவு
பிரபஞ்சத்தின் முதல் வருகையை
உறுதிப்படுத்துகிறது .
வளத்தூர் தி.ராஜேஷ் .
இன்று நீ இல்லை என்றாலும் நம் உணர்தலின் பிரபஞ்சத்தில் வாழ்வோம் வா விண்ணகி
Comments
Post a Comment