எல்லாமுமான என் ஆயாவிற்காக .
எல்லாமுமான என் ஆயாவிற்காக .
தன் நினைவுகள்
உன் காலத்தின்
முடிவிலியில்
தொடங்குகிறது.
நினைவாய்
உன் புன்னகையில்
எஞ்சி இருப்பதை
சேகரித்து கொண்டிருக்கிறேன்
பிரபஞ்ச
எதிர் காலத்திற்காக.
உன் மவுனம்
மட்டுமே
என் நிறைவாய்
நிறைகிறது .
அதுவே
என்னை வழி நடத்துகிறது .
எங்கெங்கும் உன் மன ஒலிகள்
என்னை
வந்தடைகிறது
மவுன சிறகில்.
அவ் உணர்தல்
தனித்தன்மையுடன்
பிரபஞ்சம் எங்கும்
எதிரொலித்து கொண்டிருக்கிறது .
அன்பின் ஆயா
உன் நிழலில்
ஆதியின் ஒளியினை
வழிபட்டு
கொண்டிருக்கிறேன் .
உன் மறு வருகையை
பிரபஞ்ச உணர்தலில்
மகா இயக்கமாக்கு .
வளத்தூர் தி .ராஜேஷ் .
Comments
Post a Comment