சுயத்தின் கொலைகள்.
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை
http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6056
அன்றொரு நாள் பலியிட்ட
தன் நிழலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
வன்மம் நிறைந்த காலத்தில்
சோர்ந்து விட்டிருக்கிறது நொடிகள் .
அச்சமிட்டு அலைந்து கொண்டிருந்த
கனவில் இரையாக்கப்படும்
இரவுகள் பரிதாபமானது.
குவியத்தின் இறுக்கம்
மெல்லிய இரவைக்
கடந்து கொண்டிருக்கிறது .
இருப்பின் ஒளி
என் நிலை கொண்டு
பிரதிபலிக்கிறது .
உன் தொன்மை ஒன்றின்
படிமம் நான்.
சுயத்தின் கொலைகள்
மீண்டும் மீண்டும்
கேட்பார் அற்று கிடக்கிறது .
என் அத்தனை காதலும்
திசைகளற்றுப் பரவ
உன் அமைவு பிரதி பிரபஞ்சத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறது .
தன் தவிப்புகளை அனைத்தும்
குமிழ் செய்து மன படிமத்தில்
பாதுகாத்து வைக்கிறேன் .
இரவின் ஒளிர் சூழ
மீதங்கள் கடக்கிறது .
என் அன்பினை வடிவமைக்கும்
இயக்கம் நீ மட்டுமே .
நீக்கமற நீ இருந்த காலத்தில்
நானும் இருந்து கொண்டிருக்கிறேன்.
முன் தோன்றா கனவுகளில்
நிழல் உட்கொண்ட ஒளியாகி
போனது இரவுகள் .
கணமேற்றும் நிகழில்
மீள் நீ மட்டுமே .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6056
அன்றொரு நாள் பலியிட்ட
தன் நிழலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
வன்மம் நிறைந்த காலத்தில்
சோர்ந்து விட்டிருக்கிறது நொடிகள் .
அச்சமிட்டு அலைந்து கொண்டிருந்த
கனவில் இரையாக்கப்படும்
இரவுகள் பரிதாபமானது.
குவியத்தின் இறுக்கம்
மெல்லிய இரவைக்
கடந்து கொண்டிருக்கிறது .
இருப்பின் ஒளி
என் நிலை கொண்டு
பிரதிபலிக்கிறது .
உன் தொன்மை ஒன்றின்
படிமம் நான்.
சுயத்தின் கொலைகள்
மீண்டும் மீண்டும்
கேட்பார் அற்று கிடக்கிறது .
என் அத்தனை காதலும்
திசைகளற்றுப் பரவ
உன் அமைவு பிரதி பிரபஞ்சத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறது .
தன் தவிப்புகளை அனைத்தும்
குமிழ் செய்து மன படிமத்தில்
பாதுகாத்து வைக்கிறேன் .
இரவின் ஒளிர் சூழ
மீதங்கள் கடக்கிறது .
என் அன்பினை வடிவமைக்கும்
இயக்கம் நீ மட்டுமே .
நீக்கமற நீ இருந்த காலத்தில்
நானும் இருந்து கொண்டிருக்கிறேன்.
முன் தோன்றா கனவுகளில்
நிழல் உட்கொண்ட ஒளியாகி
போனது இரவுகள் .
கணமேற்றும் நிகழில்
மீள் நீ மட்டுமே .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment