சுயத்தின் கொலைகள்.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6056

அன்றொரு நாள் பலியிட்ட
தன் நிழலைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்
வன்மம் நிறைந்த காலத்தில்
சோர்ந்து விட்டிருக்கிறது நொடிகள் .

அச்சமிட்டு அலைந்து கொண்டிருந்த
கனவில் இரையாக்கப்படும்
இரவுகள் பரிதாபமானது.

குவியத்தின் இறுக்கம்
மெல்லிய இரவைக்
கடந்து கொண்டிருக்கிறது .

இருப்பின் ஒளி
என் நிலை கொண்டு
பிரதிபலிக்கிறது .

உன் தொன்மை ஒன்றின்
படிமம் நான்.

சுயத்தின் கொலைகள்
மீண்டும் மீண்டும்
கேட்பார் அற்று கிடக்கிறது .

என் அத்தனை காதலும்
திசைகளற்றுப் பரவ
உன் அமைவு பிரதி பிரபஞ்சத்தை
உருவாக்கி
க் கொண்டிருக்கிறது .

தன் தவிப்புகளை அனைத்தும்
குமிழ் செய்து மன படிமத்தில்
பாதுகாத்து வைக்கிறேன் .

இரவின் ஒளிர் சூழ
மீதங்கள் கடக்கிறது .

என் அன்பினை வடிவமைக்கும்
இயக்கம் நீ மட்டுமே .

நீக்கமற நீ இருந்த காலத்தில்
நானும் இருந்து கொண்டிருக்கிறேன்.

முன் தோன்றா கனவுகளில்
நிழல் உட்கொண்ட ஒளியாகி
போனது இரவுகள் .

கணமேற்றும் நிகழில்
மீள் நீ மட்டுமே .

                         -வளத்தூர் தி.ராஜேஷ் .


அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு