மன ஒலியின் ஓலம்-உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை


ஓர் உணர்தலை அனைத்து விதமாகப் 
பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன்
உருமாற்றங்களின் கற்பனையை உடைத்தெறிக்க 
சிற்சில கணங்களின் காலம் இது .

உருவாகியிராத திசையின் தென்றல் தீண்ட 
உருவாகிறது என் மனதின் அசைவுகள் .
பிரபஞ்ச துருவங்கள் தொடர்ந்து சலனப்படுத்த 
மித மிஞ்சிய உணர்தலை என்ன செய்வது.

என் இல்லாமையின் இருப்பை 
எவ்விதமாக்க் கொண்டாலும் அவைகள் 
கற்பனையன்று மீதங்களின் மனப் பகிர்வு .

எதையாவது எதிர் கொள்ள அனைத்தும் இருக்கிறது
ஏற்றுக்கொள்ள சிறிது தான் 
எஞ்சி இருக்கிறது. 

நிகழும் சொற்கள் யாதெனில் 
ஒன்றுமில்லாமல் இருப்பது .
அதில் உணர்தல் 
என்  இருப்பின் பெருவெளி .

எவ்வித தொடர்பும் இன்றி 
இயற்றப்படும் இவைகள் 
ஆதியின் சலனத்தின் 
ஓர் நினைவுகளின் சான்றுகள் .

என் வார்த்தைகளை இணைத்துக்கொள்ளுங்கள் 
இல்லையெனில் விட்டு விடுங்கள் 
ஒலித்துக் கொண்டிருக்கும் மன ஒலியின் ஓலம் 
பிரபஞ்சத்தின் இருப்பு .

முற்றும் தொலைந்த ஒன்று 
என் இயலாமையுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது.

உன் அனுமானத்தின் முன்பே
நிகழ்ந்து விடக் கூடியது என் நொடிகள். 

முறையொன்றும் ஏதுமில்லாமல் 
தகித்துக் கொண்டிருக்கிறது நான் 
இதுவரை பின்பற்றாத மவுனங்கள்
      
-வளத்தூர் தி.ராஜேஷ்
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=5970

அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு