காலம்-உயிரோசை


இந்த வாரம்  உயிரோசையில் வெளியான கவிதை  

மதிப்பிழந்த என் 
சுயத்தை 
வெறுமென 
வேடிக்கை காட்டும் 
பொருளாக 
மாற்றியமைக்க 
இயன்ற வரை 
முயல்கிறது 
என்னை அறியப்படாத 
காலம் ஒன்று .

தன்னை நிருபணம்
செய்வதற்கு 
சுயத்தை 
ஒன்றுமில்லாமல் 
செய்வதை 
வேடிக்கை பார்க்கிறது 
என்னை 
அறிந்து வைத்துள்ள 
காலம் ஒன்று .

சுய அங்கீகாரம் 
அச்சில் 
பெறுவதில் இல்லை 
என்பதை 
உணர செய்கின்ற 
காலம் இன்னும் 
தோன்றியிருக்கவில்லை .

காலங்கள் 
இணைத்துள்ள 
என்னை 
பெருவெளி 
மட்டுமே 
அறியக்கூடிய 
சுயத்தை 
பெற்றிருக்கிறேன் .
                         வளத்தூர் தி.ராஜேஷ் .
 அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு 

Comments

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு