விடைபெறுதல்-உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில்  வெளியான என்  கவிதை 


http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5200


நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை .


இப்பொழுது ஏன்
விடை பெறுதல் 
அவசியமாகிறது என்றால்
என்னிடமான சுயத்தின்
மவுனம் தாங்கி
கொள்ள முடியாமல்
இருப்பதால் .


அதன் கனமேற்றத்தின்
அழுத்தங்கள்
என்னை எப்பொழுதும்
சோதித்து கொண்டிருப்பதால் .


என்னை தன்  நீர்மம்
நிறைந்த பொருளாக
மாற்ற முயல்வதால் .


என்னை தன் மகிழ்வின்
மீது அமர வைப்பதினால்


விடை பெறுதல்
மனதின்
அனைத்துமான
ஒன்றாக இருக்க
வேண்டும் .


அதன் நிலையிலே
முதன் முதலாக
தன் சுயத்தினை
பார்க்க


விடை பெறுதல்
பெறுவதற்கு
நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை.


அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு