விடைபெறுதல்-உயிரோசை
இந்த வாரம் உயிரோசையில் வெளியான என் கவிதை
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5200
நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை .
இப்பொழுது ஏன்
விடை பெறுதல்
அவசியமாகிறது என்றால்
என்னிடமான சுயத்தின்
மவுனம் தாங்கி
கொள்ள முடியாமல்
இருப்பதால் .
அதன் கனமேற்றத்தின்
அழுத்தங்கள்
என்னை எப்பொழுதும்
சோதித்து கொண்டிருப்பதால் .
என்னை தன் நீர்மம்
நிறைந்த பொருளாக
மாற்ற முயல்வதால் .
என்னை தன் மகிழ்வின்
மீது அமர வைப்பதினால்
விடை பெறுதல்
மனதின்
அனைத்துமான
ஒன்றாக இருக்க
வேண்டும் .
அதன் நிலையிலே
முதன் முதலாக
தன் சுயத்தினை
பார்க்க
விடை பெறுதல்
பெறுவதற்கு
நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை.
அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5200
நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை .
இப்பொழுது ஏன்
விடை பெறுதல்
அவசியமாகிறது என்றால்
என்னிடமான சுயத்தின்
மவுனம் தாங்கி
கொள்ள முடியாமல்
இருப்பதால் .
அதன் கனமேற்றத்தின்
அழுத்தங்கள்
என்னை எப்பொழுதும்
சோதித்து கொண்டிருப்பதால் .
என்னை தன் நீர்மம்
நிறைந்த பொருளாக
மாற்ற முயல்வதால் .
என்னை தன் மகிழ்வின்
மீது அமர வைப்பதினால்
விடை பெறுதல்
மனதின்
அனைத்துமான
ஒன்றாக இருக்க
வேண்டும் .
அதன் நிலையிலே
முதன் முதலாக
தன் சுயத்தினை
பார்க்க
விடை பெறுதல்
பெறுவதற்கு
நான் யாரிடமும்
அனுமதி
கேட்கவேண்டியதில்லை
அப்படி யாரும்
இதுவரையில்
இருந்திருக்கவில்லை.
அன்பின் நன்றிகள் உயிரோசை நண்பர்களுக்கு .
Comments
Post a Comment